ஒரே நேரத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டு அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் […]
