தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் புதிய டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திரபாபு கடந்த டிசம்பர் மாதம் ஆப்ரேஷன் கஞ்சா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த ஆப்ரேஷன் கஞ்சா திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு போதைப்பொருள் பறிமுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சோதனையின் போது பல நூறு டன்கள் மதிப்பிலான […]
