லண்டனில் கஞ்சா கலந்த மிட்டாய் சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் சுட்டோன் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் தெரியாமல் கஞ்சா கலந்து மிட்டாய்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் கஞ்சா கலந்த பொருள்களை சாப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளனர். […]
