கஞ்சாவை கடத்தி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு கார் மற்றும் வேனை பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள காரிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி சென்று விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் மற்றும் வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் […]
