தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்கள் கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடலோர காவல் படையினரும், போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தாளமுத்து நகர் அருகே ஒரு நபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தாளமுத்துநகர் காவல் துறையினர் […]
