ஊழல் குற்றசாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெரும் வயது உயர்த்தப்பட்டதை எதிரித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருப்புசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியது. நேர்மையாக, நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை ஓராண்டு நீடிப்பதால் எந்த தவறும் […]
