மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே தர வேண்டும் எனக்கோரிக்கை வைத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மருத்துவ கல்லூரி நிறுவனங்களில் சேர்ந்து மருத்துவ கல்வி பயில ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் இந்த 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் […]
