அ.தி.மு.க கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இரட்டை தலைமையே சிறந்தது என்று கூறும் நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இந்நிலையில் அ.தி.மு.க கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில் தூக்கி எறியப்பட்டது. அதுமட்டுமின்றி எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் மற்றும் […]
