ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுகவில் பல்வேறு காரணங்களால் […]
