தலீபான்களின் அச்சுறுத்தல் காரணமாக மகளிர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் சில வருடங்களாக மகளிர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை 23 வயதான நிலாப் துராணி என்பவர் நடத்திவருகிறார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்பு பள்ளி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அவர்கள் ஆட்சி அமைந்தவுடன் ஒரு பெண் கூட ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக பள்ளிக்கு வரவில்லை என்று கூறுகிறார். மேலும் முன்பதிவு செய்திருந்த பெண்களும் […]
