லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அருகே கோவிலான்விளை பகுதியில் சுரேஷ் ராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுரேஷ் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 1 லட்ச ரூபாயும், வேறு சிலரிடமும் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை சுரேஷால் உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே […]
