மதுரையில் ஓடும் பஸ்ஸில் பயணித்த பெண்ணிடம் 20 பவுன் நகையை திருடிச் சென்ற மூன்று பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் சுப்பிரமணியன் கோயில் தெருவில் வசித்து வரும் அழகர்சாமி என்பவருடைய மனைவி ருக்குமணி(36) அருப்புக்கோட்டையில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது வரும் வழியில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரிங்ரோடு மண்டேலா நகரில் இறங்கியுள்ளார். பின் அங்கிருந்து அவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் செல்லும் […]
