சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உள்ள தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உயிர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்து கொள்ள 31,094 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதில் விருப்ப பாடம் மற்றும் கல்லூரிகளை 23,458 மாணவர்கள் பதிவு […]
