மின் துறை அலுவலகங்களில் நேரடியாக கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரத்தில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதாக மின்சார வாரியம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடமிருந்து மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 5000 க்கு மேல் மின்கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடி மின்துறை அலுவலகங்களிலும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் […]
