புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6.14 கோடியில் கட்டப்படும் உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யாநாதன் நேற்று மாலை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடிய வகையில் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் சுத்தப்படுத்தப் பட்டு வருகிறது. மேலும் ஐந்து ஆண்டுகளில் காவேரி, பாலாறு, தாமிரபரணி, காளிங்கராயன், வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகளை பாதுகாக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன் பிறகு காவிரி ஆற்றில் மேட்டூரில் […]
