மாநகரப் பேருந்துகளில் பேருந்து நிறுத்தத்தை முன் கூட்டியே தெரிவிக்கும் ஒலிக்கருவி திட்டத்தை எம்எல்ஏ உதயநிதி தொடங்கி வைத்தார். சென்னையில் மாநகர் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலமாக பேருந்து நிறுத்தம் குறித்து ஒலி அறிவிப்புத் திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள பல்லவன் சாலை பணிமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். மேலும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றார்கள். […]
