அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 676 பேர் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பல்வேறு இடங்களில் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியும் ஆங்காங்கே செலுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார அரசு மருத்துவமனைகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இரண்டு தனியார் மருத்துவமனைகளிலும், பெரம்பலூரில் […]
