வாகன புகை பரிசோதனை கருவி குறித்து போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வாகன புகை பரிசோதனை கருவிகளை தயாரிக்கும் 12 நிறுவனங்கள் உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள நிறுவனத்தின் வாகன புகை பரிசோதனை கருவிகளை புகை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என்று மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினார். இது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை ஊக்கப்படுத்தும் […]
