வேலைக்கு செல்வதாக கூறி சென்ற கூலித்தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு பகுதியில் மாடசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள மில்லில் உப்பு பண்டல் போடும் தொழிலை செய்து வருகின்றார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 மகனும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாடசாமி தனது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் […]
