ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் வெல்ல முடியாத விரக்தியில் கோவையில் மேலும் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. கோவை சுந்தராபுரம் மச்சாம்பாளையம் ரௌண்ட்ரோடை சேர்ந்த ஜெய்சந்திரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பெற்றோர் இறந்து விட்ட நிலையில் உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது இதய அறுவை சிகிச்சைக்காக அதிக அளவு கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி […]