சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கடத்திச் சென்ற வாலிபர் ஒருவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள பூதனூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியுடன் அய்யப்பன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அயப்பன் வீட்டில் தனித்திருந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி […]
