வராக நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடலை மீட்ட நிலையில் மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் அக்ரஹாரம் பகுதியில் வித்யபாரதி வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படித்து வரும் மதுரையை சேர்ந்த சுந்தர நாராயணன், சென்னையை சேர்ந்த மணிகண்டன், ஐயப்பன், தர்ம முனீஸ்வரன் ஆகிய 4 பேர் அப்பகுதியில் உள்ள வராக நதியில் ஓடிக்கொண்டிருந்த […]
