ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்க முயன்ற ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டேவிஸ்புரம் பகுதியில் சென்ற ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்க முயன்ற தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் மல்லையா ராஜ் என்பவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடி மல்லையா மீது கொலை […]
