தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை சாலையில் அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில இணைச் செயலாளர் நடராஜன், துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை […]
