ரயிலில் அடிபட்டு என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் பின் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் இறந்த வாலிபர் ஒட்டப்பட்டி பழைய குடியிருப்பு பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பைரவன் என்பதும், இவர் சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை […]
