தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. அதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததாலும், வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதாலும், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 74,000 கன அடியிலிருந்து 18,000 கனஅடியாக குறைந்துள்ளது. எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும், சுற்றுலா பயணிகளுக்கு தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி […]
