ஐக்கிய நாடுகளின் மனிதநேய உதவிகளுக்கு தடை விதிக்க விலக்கு கோரும் தீர்மானத்திற்கு இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை? என்பதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், அயர்லாந்தும், அமெரிக்காவும் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது, மனிதநேயம் தொடர்பான உதவிகளுக்கான முயற்சி தடை செய்யப்படுவதில் விலக்கு அளிக்க இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்தன. பெரும்பான்மை பெற்றதால் இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியா இந்த வாக்களிப்பை நிராகரித்துவிட்டது. […]
