நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச பயங்கரவாத ஒழிப்பு படையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் சுதந்திர தினத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாதியை கைது செய்துள்ளோம் என தெரிவித்து உள்ளது. அதன்படி, சபாஉதீன் ஆஸ்மி என்ற திலாவர் கான் என்று அந்நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் […]
