கோவை மாவட்டத்தில் செல்வபுரம் தில்லைநகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்கை மாதம் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்த கோவிலில் 40 ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையின்போது ஐயப்ப சாமி சிலை நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை பக்தர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். […]
