இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் அதே மதத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்அந்த இளைஞரை போலீசார் ஏப்ரலில் கைது செய்தனர். பின்னர் சிறுமியிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தனது சொந்த விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டதாக சிறுமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜஸ்மீட் சிங் […]
