தமிழர்களுக்கு பட்டுப் புடவை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் மட்டும் தான். இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் உலகப் புகழ்பெற்றது. காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்பு தெருவில் குமாரவேலு- கலையரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டுச்சேலை வடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் மூன்றாவது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரமோற்சவம் விழாவிற்கு […]
