தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கினால் 45 நாட்கள் கழித்து ஏலக்காய் ஏலம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ளே ஏலக்காய் நறுமணப் பொருள்கள் வாரியத்தின் சார்பில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு ஏலக்காய் ஏலம் நடைபெற்று உள்ளது. இந்த ஏலம் நேற்று முன் தினம் காலையிலும், மாலையிலும் என இரண்டு முறை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்தில் போடி, கம்பம், தேவாரம், பட்டிவீரன்பட்டி, உத்தமபாளையம், விருதுநகர், கேரளா, மூணாறு சாந்தம்பாறை, வண்டன்மேடு […]
