செம்பரபாக்கம் ஏரியல் உபரி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாண்டஸ் புயலால் பலத்த மழை பெய்தது. இதனால் பல ஏரிகளில் நீர் வரத்து அதிகமானது. அதேபோல் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை 100 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர். மேலும் ஏரியின் மொத்த […]
