டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிகளை தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்தவர்கள் 28 நாட்கள் தங்களை வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் பெயர், எண் ஆகியவற்றை […]
