ஏரியில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இயற்கை உபாதை கழித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கேணிக்கரை திருகுளத்தில் கால் கழுவ இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சங்கர் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார். இதனைத் தெரியாத சங்கரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் காலையில் ஏரி பகுதியில் வந்தவர்கள் தண்ணீரில் பிணம் […]
