தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு காரணமாக வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சாரல்மழை பெய்து இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதனால் பாளையங்கோட்டை பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பகுதிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாபநாசம் காரையார் […]
