இருசக்கர வாகனம் மீது கார் மோதி வாலிபர் படுகாயமடைந்த நிலையில் காரை ஓட்டி வந்த ஏட்டு மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழசெல்வனூர் காவல் நிலையத்தில் சரவணன் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காரில் கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த விருதுநகர் மாவட்டம் கீழபரளச்சியை சேர்ந்த மகாலிங்கம் […]
