இங்கிலாந்தில் நாட்டில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஏசி வசதிகளுடன் செல்லப்பிராணிகளுக்கு விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் 31 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதால் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் செல்ல பிராணிகள் அவதிப்பட்டு வருகின்றன. அதனை பராமரிக்க முடியாமல் அதன் உரிமையாளர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் லண்டனில் நாய் மற்றும் பூனைகளுக்கு ஏசி வசதியுடன் விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவுகள், நடைப்பயிற்சிகள், ஈரமான துணிகள், தனி […]
