ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 3-வது முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை தரமணி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி, ஏ.டி.எம். மையங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து நூதன முறையில் 45 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை செய்ததில் வடமாநில கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. […]
