திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருவாய் துறையில் காலியாக இருக்கும் 60 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இணைய வழி மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மூலம் சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளி, மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, சேரன்மகாதேவி ஸ்காட் […]
