சீனாவை முந்தி கொண்டு பாங்காங்சோ ஏரிக்கரையில் உள்ள முக்கிய மலைச் சிகரத்தை இந்திய ராணுவம் தன்வசப்படுத்தியதை தொடர்ந்து, இந்தியா அத்துமீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா படைப்பிரிவு தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பாங்காங்சோ ஏரிக்கரை மலைச்சிகரங்களில் சீன ராணுவம் கேமரா மற்றும் உளவு பார்க்கும் கருவிகளை அமைத்திருந்தது. சீனாவின் உளவுகருவிகளை கடந்து சென்ற இந்திய ராணுவத்தினர், சீனா கைப்பற்ற திட்டமிட்டிருந்த பாங்காங்சோ ஏரிக்கரை தென்கரையில் உள்ள மலை சிகரத்தை கைப்பற்றினர். இராணுவத்தின் சீக்கிய […]
