இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் உரி செக்டர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையால், கடந்த 18ஆம் தேதி முதல் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். மேலும் ஒரு பயங்கரவாதி உயிருடன்பிடிபட்டான். பிடிபட்ட பயங்கரவாதி […]
