தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அங்கன்வாடி பள்ளிகளில் நடைபெறும் கிண்டர் கார்டன் வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு வகுப்புகளை நடத்துவதற்கு மாதம் 5000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி வளாகங்களில் நடைபெற்று வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் காணொளி காட்சி மூலமாக வழங்கினார். […]
