எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கியிருந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 1\2 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து சுரேஷ்குமார் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நெல்லை மாநகர போலீஸ் துணை […]
