கர்நாடகாவில் பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக எலி விஷம் தின்ற பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா என்ற நகரில் வசித்து வரும் சைஜூ என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரின் மனைவி தீப்தி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஸ்ரேயா என்ற மகள் உள்ளார். அவர்களின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் எலி விஷம் ஒன்றை வாங்கி வீட்டில் நாய் கூண்டு அருகில் வைத்திருந்தனர். […]
