கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் உடன் டெங்கு மற்றும் எலி காய்ச்சல்களும் பரவுவதாக அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், மாநிலத்தில் நேற்று புதிதாக 1417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 1426 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணம் அடைந்ததாகவும், மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார். […]
