எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்த போது தந்தையின் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் பகுதியில் அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோடங்குடி கிராமத்தில் வசித்து வரும் பாலன் என்பவரது வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ய விஜயனும் அவரது தந்தை அசோகனும் […]
