மழை, வெள்ளப் பாதிப்புக்கு ரூபாய் 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி டி ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, டெல்டா, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதை தொடர்ந்து, அதற்காக நிவாரணப் பணிகளுக்காக 2,079 கோடி வழங்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தமிழக அரசு சார்பில் திமுக எம்பி டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார். […]
