விழுப்புரத்திலுள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் எம்.பி சி.வி.சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் எம்.பி சி.வி.சண்முகம் பேசியதாவது “அ.தி.மு.க-வை கட்டுப்படுத்தவும், ஆலோசனை கூறவும் பொதுக்குழு இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக் குழுதான் உச்சபட்ச தலைமை. அந்த பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறுகிறாரோ அதனைத் தான் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். டிடிவி தினகரன் வைத்து இருப்பது கட்சியல்ல கூட்டம் ஆகும். தினகரனை நம்பி சென்ற 18 […]
