மருத்துவமனையில் இளைஞர் கூறிய புகாரால் எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தபோது இளைஞர் ஒருவர் ஓடி வந்து புகார் ஒன்றை கூறினார். அவர் கூறியுள்ளதாவது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது உறவினரை சிகிச்சைக்காக அழைத்து வந்தேன். அப்போது டாக்டர் உடனடியாக குளுக்கோஸ் செலுத்த வேண்டும் என கூறினார். இதன்பின் குளுக்கோஸ் […]
